சென்னை-பெங்களூரு இடையே புல்லட் ரயில் திட்டத்துக்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய அதிவேக ரயில் கழகம் வெளியிட்டுள்ள டெண்டர்படி, திருத்தப்பட்ட, புதிய வழித்தட வரைபடத்தின் அடிப்படையில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 306 கிலோமீட்டர் தூரம் உடைய அதிவேக வழித்தடத்தில், சென்னை சென்ட்ரல், பூந்தமல்லி, அரக்கோணம், சித்தூர், கோலார், கொடிஹள்ளி, ஒயிட்ஃபீல்டு, பெங்களூரு என எட்டு ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த புல்லட் ரயில் திட்டத்தில் 350 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்படும் எனவும், சென்னை, பெங்களூரு இடையேயான பயண நேரம் 7 மணியில் இருந்து 73 நிமிடங்களாகக் குறையும் என கூறப்படுகிறது. 306 கிலோமீட்டர் தூர வழித்தடத்தில் 28 கிலோமீட்டர் தூரம் நிலத்தடி சுரங்கப்பாதையாக அமைக்கவும், 2035-ஆம் ஆண்டுக்குள் இத்திட்டத்தை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Back to Top News
Top
July 18, 2026 at 7:24 AM
சென்னை-பெங்களூரு இடையே புல்லட் ரயில் திட்டம்..!
Polimer News