மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம் நடந்து கொண்டிருக்கும் போதே தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என மாட வீதிகளில் கூடியிருந்த பக்தர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு வந்த அமைச்சர் நிர்மல்குமார், ஒரே நேரத்தில் அனுமதித்தால் கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால் தான் காவல் துறை தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறி அமைதிபடுத்தினார். தீர்த்தம் தெளிக்கவில்லை என பக்தர்கள் கேள்வி எழுப்பியற்கு கூட்டாக விளக்கமளித்த அமைச்சர்கள், பக்தர்கள் அதிகமாக கூடியதால் அசம்பாவிதங்களை தவிர்க்க பொது தரிசனத்திற்கு முன்கூட்டியே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கோயிலுக்கு வரும் போது அனைவரும் மீதும் ட்ரோன் மூலம் தீர்த்தம் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தனர்.
Back to Top News
Top
September 17, 2026 at 9:23 AM
மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: தரிசனம் கேட்டு பக்தர்கள் வாக்குவாதம் – அமைச்சர் விளக்கம்
Polimer News