நாகர்கோவிலில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க வருபவர்களின் கவனத்தை திசைதிருப்பி, ஏடிஎம் கார்டுகளை மாற்றி, வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் திருடப்பட்ட சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இதுதொடர்பாக வடசேரி மற்றும் கோட்டார் காவல் நிலையங்களுக்கு பல்வேறு புகார்கள் வந்தன. பல்வேறு சிசிடிவி காட்சிகள் மற்றும் தொடர் விசாரணையில், ஏடிஎம் மைய திருட்டில் தொடர்புடைய தேனி மாவட்டம், ராஜகோபாலன்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிமேகலையை போலீசார் கைது செய்தனர்.