முதலமைச்சர் விஜய் பேசி முடித்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை பேச அனுமதிக்க வேண்டும் எனக் கூறி திமுக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். திமுகவினரை வெளியேற்றுவதற்கு அவைக் காவலர்கள் தயாராக இருந்த நிலையில் உதயநிதியை பேச அனுமதிக்குமாறு முதலமைச்சர் விஜய் பரிந்துரைத்த போதிலும், சபாநாயகர் அனுமதி கொடுக்காததால் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.