தூத்துக்குடி எட்டயபுரத்தில் கடந்த சனிக்கிழமை இரவு 3 வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு, மூதாட்டி ஒருவர் மர்ம நபரால் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள் மீண்டும் ஒரு வீட்டிலிருந்து 100 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளன. அரசுப்பள்ளி தலைமை ஆசிரியராக உள்ள முத்துமாரி, குடும்பத்துடன் 2 நாட்கள் வெளியூர் சென்றுவிட்டுத் திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு,பீரோவிலிருந்த 100 சவரன் நகைகளும் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனமும் திருடுபோயுள்ளது தெரியவந்தது. சிசிடிவி கேமராகளை பழுது நீக்குமாறும், இரவு நேர ரோந்தை அதிகரிக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.