தூத்துக்குடி எட்டயபுரத்தில் கடந்த சனிக்கிழமை இரவு 3 வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு, மூதாட்டி ஒருவர் மர்ம நபரால் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள் மீண்டும் ஒரு வீட்டிலிருந்து 100 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளன. அரசுப்பள்ளி தலைமை ஆசிரியராக உள்ள முத்துமாரி, குடும்பத்துடன் 2 நாட்கள் வெளியூர் சென்றுவிட்டுத் திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு,பீரோவிலிருந்த 100 சவரன் நகைகளும் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனமும் திருடுபோயுள்ளது தெரியவந்தது. சிசிடிவி கேமராகளை பழுது நீக்குமாறும், இரவு நேர ரோந்தை அதிகரிக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Back to Top News
Top
September 7, 2026 at 12:26 PM
தலைமை ஆசிரியர் வீட்டில் 100 சவரன் நகைகள் திருட்டு..
Polimer News