சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க அனுமதிக்கவில்லை என கூறி தி.மு.க. வெளிநடப்பு. சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம். சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்க்கு பதில் அளிக்க தி.மு.க.விற்கு வாய்ப்பு தருவதாக கூறிய சபாநாயகர் இரண்டே நிமிடத்தில் முடிவை மாற்றிக் கொண்டார். மேஜைக்கு ஒரு சீட் வந்ததும் பின்வாங்கியது ஏன்? என எதிர்கட்சி தலைவர் உதயநிதி கேள்வி. அமலாக்கத்துறை கொடுத்த கடிதம் எல்லாம் எப்படி ஊழலுக்கு எதிரான ஆதாரங்கள் ஆகும்? த.வெ.க. அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மீது அமலாக்கத்துறை வழக்கு இல்லையா? என உதயநிதி கேள்வி. சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் குறிப்பிட்ட ரத்தீஷ் என்பவர் யார்? என உதயநிதியிடம் செய்தியாளர்கள் வினா. தவெக ஆட்சியில் வலம் வரும் விஷ்ணு ரெட்டி, சுஜய் ரெட்டி மற்றும் அனில் ரெட்டி யார்? என உதயநிதி பதில் கேள்வி. முதலமைச்சர் விஜய் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது பெண்களுக்கு எதிராக நடித்த காட்சிகள், பேசிய வசனங்களை எல்லாம் தற்போது வெளியே எடுக்கலாமா? சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி. சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கையில் முதலமைச்சர் விஜய் பேசியது வெறும் ரீல்ஸ் கண்டென்ட் மற்றும் சினிமா டயலாக். Diversion tactics வேண்டாம் என கூறியும் கேட்கவில்லை என்று உதயநிதி சாடல். காவல்துறை மானியக்கோரிக்கை பதிலுரையின் போது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் விஜய் கூறியதால் பேச வாய்ப்பு கேட்டு அமளியில் ஈடுபட்டோம். சபாநாயகர் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்கட்சித் தலைவர் உதயநிதி பதில்.