நாகர்கோவிலில் சிறையில் கைதி உயிரிழந்த விவகாரத்தில் சிறை தலைமை வார்டன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்த நிலையில், மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். குட்கா வழக்கில் கைதான மாற்றுத்திறனாளி விசாரணை கைதி சபரி வர்மன் திங்கட்கிழமை சிறையில் உயிரிழந்த நிலையில், இதுதொடர்பாக குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிறை அதிகாரிகளிடம் இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டார். இதனிடையே சபரி வர்மனின் உடற்கூராய்வில் 19 இடங்களில் காயம் இருந்ததாக தெரிய வந்ததை தொடர்ந்து சந்தேக வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், சிறை தலைமை வார்டன், வார்டன்கள் இருவர் என மூவரை கைது செய்தனர்.
Back to Top News
Top
July 15, 2026 at 7:08 AM
சிறையில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் - விசாரணை தீவிரம்
Polimer News