திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரில் அமோனியா வாயு கசிந்து 18 பேர் உயிரிழந்த கடல் உணவு பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலைக்கு தமிழக அரசு முழுமையாகச் சீல் வைத்தது. கடந்த மாதம் 21-ஆம் தேதி அமோனியா வாயு கசிந்த தொழிற்சாலையில், அமோனியா மற்றும் கழிவுகளை அகற்றும் பணிகள் நிறைவடைந்தன. திருவள்ளூர் கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் தொழிற்சாலையில் முழுமையாக ஆய்வு மேற்கொண்ட பிறகு தொழிற்சாலைக்கான மின் இணைப்பைத் துண்டித்து, சீல் வைக்கப்பட்டது.
Back to Top News
Top
July 15, 2026 at 7:19 AM
அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்ட கடல் உணவு தொழிற்சாலைக்கு சீல்..!
Polimer News