திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரில் அமோனியா வாயு கசிந்து 18 பேர் உயிரிழந்த கடல் உணவு பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலைக்கு தமிழக அரசு முழுமையாகச் சீல் வைத்தது. கடந்த மாதம் 21-ஆம் தேதி அமோனியா வாயு கசிந்த தொழிற்சாலையில், அமோனியா மற்றும் கழிவுகளை அகற்றும் பணிகள் நிறைவடைந்தன. திருவள்ளூர் கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் தொழிற்சாலையில் முழுமையாக ஆய்வு மேற்கொண்ட பிறகு தொழிற்சாலைக்கான மின் இணைப்பைத் துண்டித்து, சீல் வைக்கப்பட்டது.