பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்க கடந்த ஆட்சிக்காலத்தில் ஒன்றரை லட்சம் ரூபாய் அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாகவும், தற்போது ஒரு ரூபாய் செலவின்றி உடனே உரிமம் வழங்கப்பட்டு வருவதாகவும் பட்டாசு தொழிலாளர்கள் நலச்சங்கத் தலைவர் கணேஷ் பாண்டி, தவெக அரசிற்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகளுக்கு உரிமம் வழங்குவதில் முந்தைய ஆட்சியில் ஊழல் நடைபெற்றுள்ளதாக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா சட்டப்பேரவையில் குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், கணேஷ் பாண்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.