நேபாள வெள்ளத்தின் போது சிக்கிக் கொண்ட மேலும் 5 தமிழர்கள் மீட்கப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டனர். விமான நிலையத்தில் அவர்களை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். உடல் அளவிலும், மனதளவிலும் கடும் பாதிப்புகளை சந்தித்த நிலையில், தங்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டதற்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.