🏏 டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்... இந்திய அணியில் சிவம் துபே, குர்னூர் பிரார்! இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து கேப்டன் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார். பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், இரு அணிகளும் 2027 உலகக் கோப்பை தயாரிப்பை மனதில் கொண்டு களமிறங்கியுள்ளன. இந்திய அணியில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குல்தீப் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இறுதி அணியில் இடம்பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக சிவம் துபே மற்றும் குர்னூர் பிரார் ஆகியோர் இந்தியாவின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்றைய போட்டி இங்கிலாந்து விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லருக்கு 200வது ஒருநாள் போட்டியாக அமைந்துள்ளது. இதன் மூலம் 225 ODI போட்டிகளில் விளையாடிய இயான் மோர்கனுக்கு அடுத்தபடியாக, 200 ODI போட்டிகளை எட்டிய இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பட்லர் பெற்றுள்ளார். அதேபோல், வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் டங் இன்றைய போட்டியின் மூலம் இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். மேலும், சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் லியாம் டாசன் தனது 50வது சர்வதேச போட்டியில் விளையாடுகிறார். இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளார். டி20 தொடருக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றியுடன் தொடங்கும் நோக்கில் இந்தியா களமிறங்குகிறது. மறுபுறம், சொந்த மண்ணில் ஆதிக்கத்தை நிலைநாட்ட இங்கிலாந்து முதலில் பெரிய இலக்கை நிர்ணயிக்க முயற்சிக்கிறது. இந்திய ரசிகர்களின் கவனம், புதிய அணிக் கூட்டணி மற்றும் பந்துவீச்சு மாற்றங்கள் மீது திரும்பியுள்ளது. குறிப்பாக, சிவம் துபே மற்றும் குர்னூர் பிரார் ஆகியோரின் செயல்பாடு இந்தப் போட்டியில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்தியா: ரோகித் சர்மா, கில் (கேபட்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல் , வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, அக்சர் படேல்,குர்னூர் ப்ரார், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா. இங்கிலாந்து: ஜேக்கப் பெத்தேல், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி ப்ரூக் (கேபட்டன்) , ஜோஸ் பட்லர் , சாம் கரன், வில் ஜாக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், லியாம் டாசன், ஜோஷ் டங், அடில் ரஷித்.