மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றியுள்ள பழமையான 36 கட்டடங்களை அடுத்த 7 நாட்களில் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தவறும் பட்சத்தில் மாநகராட்சி நிர்வாகமே கட்டடங்களை இடித்து அதற்குண்டான தொகையை வசூலிக்கும் எனக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 265 கட்டிங்களின் உறுதித்தன்மை குறித்தும், மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தின் போது பொதுமக்களை கட்டிடத்தின் மீது அனுமதிக்க கூடாது என கூறியும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.