சட்டப்பேரவை வரலாற்றிலேயே எதிர்க்கட்சியான, திமுகவிற்கும், பிற எதிர்க்கட்சிகளுக்கும் தான் பேச அதிக நேரம் தாராளமாக ஒதுக்கப்பட்டுள்ளது என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்த பின் பேட்டி அளித்த சபாநாயகர் இதனை கூறினார்.