ராமநாதபுரத்தில் ஆன்லைன் மோசடியில் சேர்ந்த பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்ற முயன்ற 4 பேர் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் பாரதி நகரிலுள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் இந்த நால்வரும் 10க்கும் மேற்பட்ட ஏடிஎம் கார்டுகள் மூலம் பணம் எடுப்பது தெரியவந்து, போலீசார் அவர்களைப் பிடித்து விசாரித்த போது, அவர்கள் சட்டவிரோதமாகப் பெறப்படும் பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்ற உதவும் ஏஜண்டுகள் என்பது தெரியவந்தது. முகம் தெரியாத மோசடி ஆசாமிகள் ஆன்லைன் முதலீட்டு மோசடிகள், போலி வேலைவாய்ப்புகள் மூலம் பெறும் தொகையை நேரடியாகத் தங்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்காமல், கிராமப்புற மக்கள், வேலையில்லாத இளைஞர்கள், ஏழை எளிய மக்களின் வங்கிக் கணக்குகளை கமிஷன் அடிப்படையில் வாடகைக்குப் பெற்று அதில் வரவு வைப்பதாகக் கூறப்படுகிறது. அந்தக் கணக்குகளில் பணம் வந்தவுடன் உடனடியாக அதனை எடுத்து, கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்சுகள் மூலம் டிஜிட்டல் கரன்சியாக மாற்றுகின்றனர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.ராமநாதபுரத்தில் ஆன்லைன் மோசடியில் சேர்ந்த பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்ற முயன்ற 4 பேர்சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் பாரதி நகரிலுள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் இந்த நால்வரும் 10க்கும் மேற்பட்ட ஏடிஎம் கார்டுகள் மூலம் பணம் எடுப்பது தெரியவந்து, போலீசார் அவர்களைப் பிடித்து விசாரித்த போது, அவர்கள் சட்டவிரோதமாகப் பெறப்படும் பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்ற உதவும் ஏஜண்டுகள் என்பது தெரியவந்தது. முகம் தெரியாத மோசடி ஆசாமிகள் ஆன்லைன் முதலீட்டு மோசடிகள், போலி வேலைவாய்ப்புகள் மூலம் பெறும் தொகையை நேரடியாகத் தங்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்காமல், கிராமப்புற மக்கள், வேலையில்லாத இளைஞர்கள், ஏழை எளிய மக்களின் வங்கிக் கணக்குகளை கமிஷன் அடிப்படையில் வாடகைக்குப் பெற்று அதில் வரவு வைப்பதாகக் கூறப்படுகிறது. அந்தக் கணக்குகளில் பணம் வந்தவுடன் உடனடியாக அதனை எடுத்து, கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்சுகள் மூலம் டிஜிட்டல் கரன்சியாக மாற்றுகின்றனர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
Back to Top News
Top
July 15, 2026 at 9:48 AM
வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டு கமிஷன் பெற்ற நபர்கள்..!
Polimer News