திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதத்துக்கான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட ஆர்ஜித சேவா தரிசன டிக்கெட்டுகள் வரும் 18-ஆம் தேதி காலை பத்து மணிக்கு வெளியிடப்படுகின்றன. திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் 20-ஆம் தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் பதிவு செய்துகொள்ளலாம். மின்னணு குலுக்கல் முறையில் தேர்வாகும் பக்தர்கள் 20-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி மதியம் 12 மணிக்குள் கட்டணத்தைச் செலுத்தி தங்களுக்கான டிக்கெட்டை உறுதி செய்துகொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.