திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அணியாப்பூர் கிராமத்தில் நோய் நொடியில் இருந்து மீண்டு வந்தவர்களை பாடையில் ஏற்றி இறுதி ஊர்வலம் போல் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் விநோத சடங்கு நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கிராம மக்கள் கலர் பொடிகளை வீசியும், ஒருவரையொருவர் துடைப்பத்தால் அடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.