தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே குறிச்சி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்ததாக வீடியோ வெளியான நிலையில் ஆறு டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 140 ரூபாய் விலை கொண்ட பாட்டிலுக்கு கூடுதலாக 20 ரூபாய் பணம் வசூலித்ததாக ஊழியரிடம் மதுப்பிரியர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.