பாலிவுட் திரையுலகில் பிரபலமான; வசீகரமான நடிகையாக வலம் வருபவர் நோரா ஃபதேஹி ((Nora Fatehi )). இவரது நடிப்பை தாண்டி கிளு கிளு நடனத்திற்கும் கோடிக்கணக்கான குதூகல ரசிகர்கள் உள்ளனர். ‘பாகுபலி’ பட “மனோகரி...” வசீகரப் பாடலில் பச்சை நிற உடையுடன் ஆடி, பிரபாஸை மயக்க முயற்சித்து, தமிழ் ரசிகர்களையும் மயக்கிய 3 ஆடலரசிகளில் ஒருவர்தான் இவர். அதுவும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 4.65 கோடிக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ்களை உருவாக்கி, ரொம்பவே ஆக்டிவாக இருப்பவர் நடிகை நோரா ஃபதேஹி. இவரது “Oh Mama! TETEMA ” பாடல் 115 மில்லியனுக்கு மேற்பட்ட யூடியூப் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டுள்ளது. அவரது பெயரிலேயே உள்ள யூட்யூப் பக்கத்தில் தொடர்ந்து பல்வேறு ஆல்பம் பாடல்களை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார். ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவ்வப்போது அவரது புகைப்படங்களை பதிவு செய்து, உற்சாகப்படுத்துகிறவர். இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர லஞ்சம் வாங்கியதாக கடந்த 2017-ம் ஆண்டு டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரிடம் விலை உயர்ந்த பரிசு பொருட்களை வாங்கியதாக சர்ச்சையில் சிக்கியவர். இந்தநிலையில்தான், இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ, அவருக்கு தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் மும்பையிலிருந்து ஜெய்ப்பூருக்கு Cessna Citation சிஜே2 விமானத்தில் பயணம் செய்தபோது,நடிகை நோரா ஃபதேஹி விமானத்தினுள் பதிவுசெய்த வீடியோவிலிருந்து இந்த சர்ச்சை உருவாகியுள்ளது. பின்னர், அந்த நடிகை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ, அவர் அந்த விமானத்தை ஒரு "மினியேச்சர்," ஒரு "பொம்மை," மற்றும் ஒரு "லெகோ விமானம்" என்று குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது. நோரா ஃபதேஹியின் இந்த வீடியோ அவரது கோடிக்கணக்கான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு விவாதத்தை ஏற்படுத்தியது. சமூக வலைதளத்திலும் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைச் சுட்டிக்காட்டிய டூன்ஸ் ஏவியேஷன்((Dunes Aviation )) நிறுவனம் அவரது கருத்துகள் சமூக ஊடகங்களைத் தாண்டியும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டியது. அவரது இன்ஸ்டா பின்தொடர்பாளர்கள் அந்தக் கருத்துக்களைப் பரப்பி, விமான முன்பதிவுகள் ரத்து செய்யப்படுவதற்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, அந்தப் பதிவுகளால் முன்பதிப்புகள் 15 லிருந்து 20 சதவீதம் குறைந்ததோடு, ரத்துகளும் அதிகரித்துள்ளன. இதனால், நிதி இழப்புகளும், நிறுவனத்தின் நற்பெயருக்கு சேதமும் ஏற்பட்டதாக டூன்ஸ் ஏவியேஷன் குற்றம் சாட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட்ட தனது வழக்கில், அந்த விமான நிறுவனம் நோரா ஃபதேஹியின் கருத்துக்களை "கவனக்குறைவான, பொறுப்பற்ற, மற்றும் எந்தவொரு தொழில்நுட்ப அறிவு, சரிபார்ப்பு அல்லது உண்மைகள் இன்றி கூறப்பட்டவை" என்று விவரித்துள்ளது. மேலும், நோரா ஃபதேஹி தனது சமூக ஊடகப் பதிவுகள் மூலம், "நற்பெயருக்கு கடுமையான சேதம், நற்பெயருக்கு பாதிப்பு மற்றும் வணிக ரீதியான தீங்கு ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளார்" என்றும் அந்நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், நோரா ஃபதேஹிக்கு எதிராகத் தொடரப்பட்ட இந்த வழக்கில், விமான நிறுவனம் 3 கோடி ரூபாய் இழப்பீடு கோரியுள்ளது. அதோடு, விமானத்தைக் குறிப்பிடும் நடிகையின் சர்ச்சைக்குரிய சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் வீடியோக்களை நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அந்நிறுவனம் கோரியுள்ளது. அதோடு, நோரா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது. இந்த வழக்கு செப்டம்பர் 25 ஆம் தேதி நீதிமன்றம் விசாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, கடந்த 2022 ஆம் ஆண்டு சுகேஷ் சந்திரசேகரு தொடர்பான வழக்கில் விசாரிக்கப்பட்ட பாலிவூட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது, நோரா ஃபதேஹி 200 கோடி ரூபாய் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது, தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த, திட்டமிட்டு சதி செய்ததாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் சில ஊடகங்கள் மீது நடிகை நோரா பதேஹி அப்போது குற்றம்சாட்டினார். இந்தநிலையில்தான், நடிப்பு... வசீகர டான்ஸ் ஆல்பங்கள்...கோடிக்கணக்கான பார்வையாளர்கள் என இன்ஸ்டா, யூட்யூப்களில் எப்போதும் ‘vibe’ போடு இருக்கும் நடிகை, தற்போது விமான நிறுவனம் தொடுத்த அவதூறு வழக்கால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
Back to Top News
Top
September 9, 2026 at 9:19 AM
பிரபல நடிகை ரீல்ஸ் வினை ரூ.3 கோடி கேட்டதால் சர்ச்சை.. ‘பாகுபலி’ வசீகர மனோகரிக்கு இன்ஸ்டாவால் வந்த பிராப்ளம்!
Polimer News