தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், அம்மாபேட்டை புத்தூர் மணக்கொல்லையை சேர்ந்தவர் மலர்க்கொடி. இவர், தனது கணவர் சிவசாமிக்கு கொடுப்பதற்காக கோயில் பிரசாதத்தை வீட்டில் வைத்திருந்ததாகவும், அதனை மருமகள் வனவள்ளி வளர்த்து வந்த நாய் சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மாமியார் மருமகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது மதுபோதையில் இருந்த சிவசாமி தனது மருமகள் வனவள்ளியை கடப்பாறையில் தலையில் அடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். தகவலறிந்த அம்மாபேட்டை போலீசார் சிவசாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.