தமிழகத்தில் இந்த ஆண்டில் ஜூலை 16-ஆம் தேதி வரை 8 ஆயிரத்து 963 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகபட்சதாக சென்னையில் ஆயிரத்து 656 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாமக்கல், திருவள்ளூர், தேனி மாவட்டங்களில் தலா ஒருவர் என மூன்று பேர் டெங்கு காய்ச்சலுக்குப் உயிரிழந்துள்ளனர். சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளதாகவும், டெங்குவை கட்டுப்படுத்த தீவிர கொசுப் புழு ஒழிப்பு நடவடிக்கைகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.