சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்; டெல்டா மற்றும் கடலோர மாவட்ட ஆட்சியர்கள் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பு பருவமழை காலத்தில் பேரிடர் மேலாண்மை, சுகாதாரம், மின்சாரம் உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார் முதலமைச்சர் விஜய்; மீட்பு உபகரணங்கள், மீட்பு படையினரின் தயார் நிலை, தேவையான பகுதிகளில் மீட்பு படையினரை முன்கூட்டியே நிலைநிறுத்தல் பற்றி விவாதிக்க ஏற்பாடு நிவாரண மையங்களில் மின்சாரம், குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்வது குறித்தும் ஆலோசனை; நீர்நிலைகள் தூர்வாருதல், ஆகாய தாமரை மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை விரைவுபடுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது