திண்டிவனம் அருகே, பள்ளி மாணவர்கள் கோரிக்கை வைத்த மறுநாளே புதிய பேருந்து சேவையை அமைச்சர் வன்னியரசு தொடங்கிவைத்தார். வெள்ளிக்கிழமை, ஆவணிப்பூர் கிராமம் வழியாகச் சென்ற அமைச்சர் சாலையில் நின்ற மாணவர்களிடம் குறைகளை கேட்டார்.மாலை பள்ளி முடிந்த பின் 2 மணி நேரம் வரை பேருந்துக்காக காத்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். உடனடியாக போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபனிடம் செல்போனில் பேசிய அமைச்சர் வன்னியரசு, பேருந்து வசதி கிடைக்க வழிவகை செய்தார்.