முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்தது தொடர்பான வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.பி. ஜெகநாதன் என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 1977 ஆம் ஆண்டில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி பெற்ற அவர், 2016 ஆம் ஆண்டில் இரண்டாவது திருமணம் செய்ததாக புகாரின் பேரில் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.