சென்னை ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலின் உரிமையாளரான 'எக்ஸ்பிரஸ் இன்பிராஸ்ட்ரக்சர்' நிறுவனத்திடம் 2 கோடியே 81 லட்சம் ரூபாய் மோசடி புகாரில் மும்பையை சேர்ந்த தனியார் விமான நிறுவனத்தின் நிர்வாகிகள் மீது சென்னை மத்தியக்குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் (Bristol) நகருக்குச் செல்ல கடந்த ஏப்ரல் 29 அன்று தனியார் வாடகை விமானம் ஏற்பாடு செய்வதற்காக ஆரியா ஏவியேஷன் என்ற நிறுவனத்திடம் முன்பணம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் விமானத்தை ஏற்பாடு செய்யாமல் ஏமாற்றியதுடன் பணத்தையும் திருப்பித் தரவில்லை என்ற புகாரில் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Back to Top News
Top
August 24, 2026 at 7:12 AM
ரூ.2.81 கோடி மோசடி புகாரில் தனியார் விமான நிறுவனம் மீது வழக்குப்பதிவு..!
Polimer News