ராமநாதபுரம் மாவட்ட வடக்கு கடல் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 65 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என்பதால் ராமேஸ்வரம், மண்டபம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்பதற்கான அனுமதி சீட்டு இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால்,8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுபடகுகள் மற்றும் விசைப் படகுகள் கடலுக்கு கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.