சிவகாசி அருகே 20-க்கும் மேற்பட்ட கிராமங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் ஆனைக்குட்டம் அணையைத் தூர்வாரவும், அங்கு நடைபெறும் சட்டவிரோத மணல் திருட்டைத் தடுக்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 27 அடி உயரம் கொண்ட இந்த அணையை நம்பி திருத்தங்கல், செங்கமலப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, வடமலாபுரம், முதலிப்பட்டி, வாடியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 3003 ஹெக்டர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதியும், விருதுநகர், திருத்தங்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 20 கிராமங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
Back to Top News
Top
July 16, 2026 at 11:19 AM
வறண்ட ஆனைக்குட்டம் அணையை தூர்வார விவசாயிகள் கோரிக்கை..!
Polimer News