ரெஸ்டோ பார் எனும் உணவகத்துடன் கூடிய மதுபான கூடங்களுக்கு அனுமதி வழங்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டாஸ்மாக் கடைகளுடன் இயங்கி வரும் பார்களின் எண்ணிக்கையை குறைத்து கர்நாடகா, ஆந்திரா, கேரள உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் உள்ளதை போல் ரெஸ்டோ பார் அனுமதி வழங்க திட்டமிட்டப்படுவதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் தற்போது FL2 லைசன்சை வைத்து வாட் வரி செலுத்தாமல் ரெஸ்டோ பார் என்கிற பெயரில் பல பார்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், வாட் வரியுடன் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.