மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் அதிகாரிகள் நெல் முதல் நிலையங்களை திறக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறி, கோபிசெட்டிபாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 3 தினங்களாக முதற்பருவ நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அறுவடை செய்த நெல்லை தனியார் இடத்தில் கொட்டி வைத்துள்ளதால், நெல் மணிகள் மழையினால் வீணாகிவிடுமோ என்று விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.