மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மற்றும் ராமேஸ்வரத்தில் இருந்து 2 முன்பதிவில்லா விரைவு சிறப்பு ரயில்கள் இரு மார்க்கத்திலும் இயக்கப்படுகின்றன. புதன்கிழமையன்று திருநெல்வேலியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் ரயில், மதுரைக்கு மாலை 5.35 மணிக்கும், இரவு 6.30 மணிக்கு மதுரை கூடல்நகருக்கும் சென்றடையும். ராமேஸ்வரத்தில் இருந்து புதன்கிழமை மாலை 4.55 மணிக்கு புறப்படும் ரயில், மதுரைக்கு இரவு 7.45 மணிக்கும், பின்னர் இரவு 10.30 மணிக்கு பழனிக்கும் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.