பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக முந்தைய திமுக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டு, ஆட்சி மாற்றத்துக்கு பிறகு நீதிபதி விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றுவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தற்போதைய தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Back to Top News
Top
July 22, 2026 at 10:29 AM
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு சம்மதம்..!
Polimer News