தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே சிவகாமிபுரத்தில் காதல் திருமணம் செய்து தனியாக வசித்துவந்த தம்பதியை, அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய பெண்ணின் தந்தை முருகன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். வேறு சமூகத்தைச் சேர்ந்த நபரை மகள் திருமணம் செய்துக் கொண்டதால் பெண்ணின் தந்தை கோபத்தில் இருந்ததாகவும் இதனால் வீடு புகுந்து மருமகனை வெட்டியபோது, அதனை தடுக்க வந்த மகளையும் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் இருந்த தம்பதியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
Back to Top News
Top
September 11, 2026 at 7:29 AM
காதல் திருமணம் செய்துக் கொண்ட தம்பதிக்கு அரிவாள் வெட்டு..
Polimer News