செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கத்தில் 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைத்ததற்கான Bill-ஐ செட்டில் செய்வதற்கு ஒப்பந்தராரர் நவீன் என்பவரிடம் த.வெ.க. ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி தனது அலுவலகத்தில் வைத்து லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. பணிகள் முடிந்தும் பணம் வராததால் தன்னை நாடிய ஒப்பந்ததாரர் நவீனிடம் வீராசாமி ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக ஒப்பந்ததாரர் நவீன் ஜி-பே மூலம் 50 ஆயிரம் ரூபாயை அனுப்பிய நிலையில், 2 லட்சம் ரூபாய் வேண்டும் என்று வீராசாமி கேட்டுள்ளார். 2 லட்சம் ரூபாயை கொடுத்தால் தனக்கு நஷ்டம் ஏற்படும் என்று கூறி ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கொடுக்க ஒப்புக்கொண்ட நவீன், மேலும் 50 ஆயிரம் ரூபாயை ஜி-பே மூலம் அனுப்பிவிட்டு மீதமுள்ள 30 ஆயிரம் ரூபாயை த.வெ.க. ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமியிடம் பணமாக நேரில் வழங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து விளக்கம் அளித்த வீராசாமி, ஒப்பந்ததாரர் நவீனுக்கு ஏற்கனவே கடனாக கொடுத்த பணத்தை தான் திருப்பி வாங்கியதாக தெரிவித்தார்.