தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையின் கண்காணிப்பாளர் தமிழரசன் என்பவர் 2 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி பேட்டை குற்றாலம் சாலையில் காரில் சென்றுகொண்டிருந்த தமிழரசனை, அங்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா இருந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து நெல்லை சரக சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன் தலைமையில், பேரூரணி சிறையில் நடைபெற்ற சோதனையில், கைதிகளுக்கு கஞ்சா விற்றது தெரியவந்தது. இதனையடுத்து சிறையின் கண்காணிப்பாளர் தமிழரசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
Back to Top News
Top
August 24, 2026 at 10:43 AM
கஞ்சா வைத்திருந்ததாக சிறை கண்காணிப்பாளர் கைது..!
Polimer News