இம்ரான் கானுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யும்படி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபுக்கு கபில்தேவ், கவாஸ்கர் உள்ளிட்ட பல நாடுகளின் முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டன்கள் 21 பேர் வலியுறுத்தியுள்ளனர். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி, இம்ரான் கானுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், இம்ரான் கானை அவரது குடும்பத்தினர் வாரந்தோறும் சந்திக்க மனிதாபிமான அடிப்படையில் அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசியல் காரணங்களுக்காக அல்லாமல், இம்ரான் கானுடன் விளையாட்டுக் களத்தில் தங்களுக்கு இருந்த நட்புறவின் அடிப்படையில் இந்தக் கோரிக்கையை விடுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 73 வயதான இம்ரான் கான், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.