நெல்லையில், ஆண் நண்பருடன் தனியாக இருந்த +2 மாணவியை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. முனீஸ்வரன் என்பவன் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து +2 மாணவி ஒருவருடன் நெருங்கி பழகியுள்ளான். இருவரும் தனிமையில் சந்தித்துக்கொண்டபோது, எதேச்சையாக அங்கு சென்ற சின்னக்குட்டியும் அவனது கூட்டாளி முருகேசனும் மாணவியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். மாணவி அளித்த புகாரின் பேரில் மூவரும் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது சின்னக்குட்டிக்குத் தூக்குத் தண்டனையும்,அவனது கூட்டாளி முருகேசனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். ஆண் நண்பரான முனீஸ்வரனுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
Back to Top News
Top
September 8, 2026 at 12:01 PM
கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்குத் தண்டனை..!
Polimer News