உப்பு குறைப்பு மற்றும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார். சட்டப்பேரவையில் பேசிய அவர், மக்களின் அன்றாட உணவில் உள்ள உப்பின் அளவை குறைக்கும் வகையில் மாநில அளவிலான இயக்கம் ஒன்றை அமைக்க தமிழக அரசு முன் வந்துள்ளதாக குறிப்பிட்டார். அதேபோல், தமிழ்நாட்டில் டெங்கு நோய் தடுக்க புதிய முன்னெடுப்பு மேற்கொள்வதாகவும் அருண் ராஜ் குறிப்பிட்டார். மாநிலத்தில் டெங்கு நோய் பரவாமல் இருக்க அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ள சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.