உலகின் மிகப்பெரிய இசை மேதைகள் சிறு வயதிலேயே பியானோவைப் பார்த்து, கற்றுக்கொண்டு வளர்ந்தவர்கள் என்றும், தான் பியானோவைப் பார்ப்பதற்கே 27 வயதாகிவிட்டதாகவும் இசை அமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மஞ்சணத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், கர்ப்பிணி வயிற்றில் இருந்த குழந்தையின் நின்று போன அசைவுகள், தனது இசையை தாய் கேட்டதால் மீண்டும் தொடங்கியதாக கூறினார்.