பாலக்கோடு அருகே, தேசிய நெடுஞ்சாலையின் சென்டர் மீடியனில் நடப்பட்டுள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த டேங்கர் லாரியின் பின்புறத்தில் அரசு பேருந்து மோதியதில், பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெங்களூருவிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற அந்த அரசுப்பேருந்தில் பயணித்த 30 பயணிகளில் 15 பேர் காயமடைந்தனர்.