டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளுக்கு சரக்கு அனுப்பும் நடைமுறையில் முக்கிய மாற்றத்தை டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஜூலை 20-ஆம் தேதி முதல் அமலில் இருந்த சமபங்கீடு முறையை ரத்து செய்து, கடைகளின் உண்மையான தேவைக்கேற்பவே சரக்கு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது இந்த புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் அனைத்து மாவட்ட மேலாளர்களும், சில்லறை விற்பனைக் கடைகளுக்கு இண்டெண்ட் (Indent) வழங்கும்போது, அந்தந்த கடைகள் கேட்கும் உண்மையான தேவை / கோரிக்கையின் அடிப்படையில் மட்டுமே வழங்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் கடைகளில் தேங்கும் விற்பனையாகாத சரக்கு குறையும், விற்பனை அதிகம் உள்ள பிராண்டுகள் தேவைக்கேற்ப கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.