நெல்லை மாவட்டம் வெள்ளாங்குழி பகுதியைச் சேர்ந்த நெசவாளரான ராம்குமார் மங்கையர் திலகம் தம்பதியின் 3 மகன்கள் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து அசத்தியுள்ளனர். மூத்த மகன் வெங்கட் ஸ்ரீ கடந்த 2022-23ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு எழுதியும் போதிய மதிப்பெண் கிடைக்காத நிலையில் விடாமுயற்சியுடன் நீட் தேர்வை எழுதி இந்த ஆண்டு 440 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதனிடையே வெங்கட் ஸ்ரீயின் இரட்டை சகோதரர்களான அருண், தரண் ஆகியோரும் இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதி முறையே 511 மற்றும் 494 மதிப்பெண்கள் பெற்றனர். இதையடுத்து 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் 3 பேருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. வெங்கட் ஸ்ரீக்கு நாகர்கோவில் பல் மருத்துவக் கல்லூரியிலும், அருணுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியிலும், தரணுக்கு கோயம்புத்தூர் PSG மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது