தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக மின்வெட்டு இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தகவல். காற்றாலை மூலமான மின் உற்பத்தி குறைந்த நிலையிலும் தமிழ்நாட்டில் 2வது நாளாக இரவு நேரத்தில் மின்வெட்டு இல்லை. காற்றாலை மூலமான மின் உற்பத்தி குறைந்ததால் ஏற்பட்ட பற்றாக்குறையை வெற்றிகரமாக சமாளித்துவிட்டோம். தமிழ்நாடு முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்திற்காக கூடுதலாக 2000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்.கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுள்ளதால் தற்போது பற்றாக்குறை இல்லை எனவும் விளக்கம்