சென்னை மடிப்பாக்கம் குபேரன் நகரில், ஜப்தி நடவடிக்கைக்கு உள்ளான தனது வீட்டை லீசுக்கு விட்டு 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை குடியிருந்தவருக்குத் திருப்பித் தராமல் ஏமாற்றியதாக வீட்டு உரிமையாளர் ரமேஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். குபேரன் நகரில் உள்ள வீட்டை முகமது யூசுப் என்பவருக்கு ரமேஷ்குமார் 15 லட்ச ரூபாய்க்கு லீசுக்கு விட்டுள்ளார். குடிவந்த சில நாள்களிலேயே வீட்டுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், முகமது யூசுக்கு 2 லட்ச ரூபாயை திருப்பிக் கொடுத்த ரமேஷ்குமார் மீதிப்பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளார். வீடு சீல் வைக்கப்படும் என்று தெரிந்தே லீசுக்கு விட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக முகமது யூசுப் கொடுத்த புகாரில் பேரில் ரமேஷ்குமார் கைது செய்யப்பட்டார்.