கோயம்புத்தூரில் பெண் இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்ப முயன்ற நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர். 14 வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தோஷ், தவசி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். சிறுமியை மிரட்டுவதற்குப் பயன்படுத்திய அரிவாளை மீட்க, சம்பவ இடத்துக்கு தவசியை பெண் இன்ஸ்பெக்டர் ஸ்வர்ணவள்ளி தலைமையிலான போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது, அங்கு மறைத்துவைத்திருந்த அரிவாளை எடுத்து இன்ஸ்பெக்டரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற தவசியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். காயமடைந்த இன்ஸ்பெக்டர் ஸ்வர்ணவள்ளி மற்றும் தவசி இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.