சென்னையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி நகைகள் வைத்து மோசடி என புகார். வாடிக்கையாளர்களால் அடகு வைக்கப்பட்டிருந்த ரூ.3.15 கோடி தங்க நகைகளை மாற்றி போலி நகைகள் வைப்பு. வங்கியின் முதன்மை மேலாளர் அளித்த புகாரின் பேரில் 4 வங்கி ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை பாதுகாப்பு பெட்டகத்தில் அடகு நகை பாக்கெட் ஒன்று மாயமாகி பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதால் மேலாளர் சந்தேகம். பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த அனைத்து அடகு நகைகளும் நகை மதிப்பீட்டாளர் மூலம் மறுஆய்வு. 24 நகை கடன் கணக்குகளில் இருந்த அசல் தங்க நகைகள் திருடப்பட்டு அதற்குப் பதிலாக போலி நகைகள் இருந்தன நகை கடன் கணக்குகளில் அடகு வைக்கப்பட்டிருந்த அசல் நகையின் எடை 2 கிலோ 137 கிராம் என்பது கண்டுபிடிப்பு. பாதுகாப்பு பெட்டகத்தின் சாவிகளை பராமரிக்கும் கூட்டு பொறுப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இணைந்து சதியில் ஈடுபட்டதாக தகவல்