தூத்துக்குடியில் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கியும், அணியாதவர்களுக்குக் கொரில்லா வேடமணிந்த நபரைக் கொண்டு அடி கொடுத்தும் போக்குவரத்து காவல்துறை சார்பில் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சாலை விபத்துகளில் உயிரிழப்பைத் தவிர்க்கும் பொருட்டு, அபராதத்துக்காக அல்லாமல் உயிரைக் காக்கவே தலைக்கவசம் அணிய வேண்டும் என போக்குவரத்து காவல்துறை வலியுறுத்தியுள்ளது.