Facebook, Instagram போன்ற சமூக வலைதளங்களில், நாம் பின் தொடர்வோரின் பதிவுகளை மட்டும் பார்ப்பதா அல்லது அந்த நிறுவனங்களின் Algorithm-ஆல் பரிந்துரைக்கப்படும் பதிவுகளையும் பார்ப்பதா என்பதை பயனர்களே தேர்வு செய்துகொள்ள வழிவகை செய்யும் புதிய சட்ட மசோதாவை ஆஸ்திரேலிய அரசு முன்மொழிந்துள்ளது. குழந்தைகள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த முதல் நாடாகத் தடை விதித்த ஆஸ்திரேலிய அரசு, ஐரோப்பிய ஒன்றியத்தை பின்பற்றி இந்த முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது. விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு 750 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Back to Top News
Top
September 8, 2026 at 11:30 AM
சமூக வலைத்தளங்களில் எதை பார்ப்பது என பயனர்களே தேர்வு செய்யலாம்..
Polimer News