கடலூர் மாவட்டம் புவனகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூரியனைச் சுற்றி அடர்த்தியான ஒளிவட்டம் தோன்றியதை ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள் அக்காட்சியை செல்ஃபோன்களில் படமெடுத்துப் பகிர்ந்து வருகின்றனர். பரிவேஷம்' என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு, காற்றில் அதிக ஈரப்பதம் இருப்பதையும், விரைவில் கனமழை பெய்யக்கூடும் என்பதையும் குறிப்பதாக அறிவியல் ரீதியாகக் கூறப்படுகிறது.