பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோவிலில் சூரசம்கார நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. சதுர்த்தி பெருவிழாவின் ஆறாம் திருநாளையொட்டி நடந்த விழாவில் சூரனை, விநாயகப் பெருமான் தனது தந்தத்தால் வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர், மங்கள வாத்தியங்கள் முழங்க, விநாயகப் பெருமான் கோவிலைச் சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.