ICC ஆண்டு மாநாட்டில் முக்கிய முடிவுகள்... 40 ஓவர் ODI திட்டமில்லை; WTC விரிவாக்கமும் ஒத்திவைப்பு! ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஆண்டு மாநாட்டில், உலக கிரிக்கெட்டின் எதிர்காலம் தொடர்பாக பல முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. இருப்பினும், அண்மையில் பேசப்பட்ட சில முக்கிய மாற்றங்கள் குறித்து உடனடி முடிவுகள் எடுக்கப்படவில்லை. முதலாவதாக, ஒருநாள் போட்டிகளை 50 ஓவரிலிருந்து 40 ஓவராகக் குறைக்கும் திட்டம் தற்போது இல்லை என்று ICC தெளிவுபடுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடந்தாலும், எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. அதேபோல், தற்போது 9 அணிகள் பங்கேற்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தொடரை 12 அணிகளாக விரிவுபடுத்தும் திட்டமும் உடனடியாக நடைமுறைக்கு வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் ஆலோசனைகள் தொடரும் என கூறப்பட்டுள்ளது. நிர்வாக சிக்கல்கள் காரணமாக USA Cricket மற்றும் Cricket Canada ஆகிய அமைப்புகள் மீதான ICC இடைநீக்கம் தொடரும் என்றும் மாநாட்டில் உறுதி செய்யப்பட்டது. இரு நாடுகளின் தேசிய அணிகளும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு தொடர்ந்தாலும், நிர்வாக அமைப்புகள் மீதான தடைகள் நீடிக்கும். இதற்கிடையில், Mauritius Cricket Federation-க்கு ICC Associate Member அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ICC உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.