நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், பல கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் பங்கேற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி வீடியோ காட்சிகளை வைத்து முக அடையாளம் கண்டுபிடிப்பு தொழில்நுட்பம் மூலம் போலீசார் ஆய்வு செய்ததில், குற்றப் பின்னணி கொண்ட 2,873 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டது தெரியவந்துள்ளது. இவர்களில், 989 பேர் மீது கொலை, பாலியல் வன்கொடுமை, கடத்தல், வழிப்பறி, போக்ஸோ போன்ற குற்றங்கள் பதிவாகியிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். 284 பேர் மீது வழிப்பறி, 229 பேர் மீது ஆயுதச் சட்டம், 101 பேர் மீது கொலை, 62 பேர் மீது கொலை முயற்சி, 61 பேர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இவர்களில் பலர், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் என்றும் கூறப்படுகிறது.